களத்திற்கு மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி..ரோஹித் சர்மா சிறப்பு பேட்டி

களத்திற்கு மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி..ரோஹித் சர்மா சிறப்பு பேட்டி

கொரோனா லாக்டவுன் தளர்வுக்கு பின் முதல் முறையாக வெளியில் பயிற்சி எடுத்துள்ள ரோஹித் சர்மா தன்னை தானே நீண்ட நாட்களுக்கு பின் உணர்வதாக தெரிவித்துள்ளார்.


இந்திய கிரிக்கெட் அணியின் துணைக்கேப்டன் ரோஹித் சர்மா. இவர் கடைசியாக நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் விளையாடிய போது காயம் காரணமாக வெளியேறினார். அதன்பிறகு தற்போது வரை கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் ஒதுங்கி இருக்கும் சூழ்நிலை உருவானது.

இதற்கிடையில் கொரோனா லாக்டவுன் தளர்வுக்கு பின் முதல் முறையாக வெளியில் பயிற்சி எடுத்துள்ள ரோஹித் சர்மா தன்னை தானே நீண்ட நாட்களுக்கு பின் உணர்வதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரோஹித் வெளியிட்டுள்ள பதிவில், “களத்திற்கு மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி. சில வேலைகளை முடித்தேன். நீண்ட நாட்களுக்கு பின் நான் என்னை உணர்கிறேன்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் தான் எந்த மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டேன் என்ற தகவலை ரோஹித் அந்த பதிவில் குறிப்பிடவில்லை. கடந்த மார்ச் 25 ஆம் தேதிக்கு பின் வீட்டிலேயே இருந்த ரோஹித் முதல் முறையாக பயிற்சி மேற்கொண்டுள்ளார். முன்னதாக புஜாரா சமீபத்தில் ராஜ்கோட்டில் வலைப்பயிற்சியை துவங்கினார்.


அதே போல இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் சார்துல் தாகூர் முதல் ஆளாக கடந்த மாதமே பல்ஹார் மாவட்டத்தில் வலைப்பயிற்சியை துவங்கினார்.

Post a Comment

0 Comments